ஆன்மிகம்

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால்… அதிர்ஷ்டமா?

நமது முன்னோர்கள் சில ஜோதிட சாஸ்திரங்களை வகுத்து வைத்துள்ளனர். அவை யாவும அறிவியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். அந்த வகையில் வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் அனைத்தும் நம் முன்னோர்கள் ஏதோ ஒரு அறிவியல் காரணங்களுக்காக சொல்லி வைத்திருப்பார்கள். ஆனால் அதனை காலப்போக்கில் தவறாக புரிந்துக்கொண்டு நம் வீட்டில் உள்ள பெரியவர்களோ, உறவினர்களோ, அக்கம் பக்கத்தினர்களோ கூறுவார்கள்.

அப்படி அவர்கள் நம்பும் ஒரு தகவல் தான் சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது, தாய் மாமனுக்கு ஆகாது என்பது எல்லாம். உண்மையில் சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா என்று பார்கலாம்.

தமிழர்கள் வாழ்வியலில் சித்திரை மாதம் தான் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடுகிறோம். சித்திரை மாதம் (chithirai month baby born in tamil) பல கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இப்படி விஷேசமான மாதமான சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் ஏன் அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்கிறார்கள் என்று பார்த்தால், சத்திரை மாதம் வெயில் உச்சத்தில் இருக்கும். சித்திரை மாத வெயிரை சாதரணமான மனிதர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியாது. அவ்வாறு இருக்கும் போது கர்ப்பிணியான ஒரு பெண்ணால் கட்டாயம் தாங்கி கொள்ள முயாது. அப்படி இருக்கும் போது கர்ப்பிணி பெண்ணால் குழந்தை பிரசவிப்பது மிகவும் கடினமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கும் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாது. அந்த காலத்தில் அதுவும் மின்சாரம், மின்விசிறி, ஏசி போன்ற எந்த வசதியும் இல்லாமல் இருந்தது.

சித்திரை மாதம் தான் அம்மை போன்ற நோய்கள் உருவாகக்கூடிய காலமாகும். இப்படி அம்மை நோய் குடும்பத்தில் யாருக்காவது அம்மை நோய் வந்துவிட்டால், அது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வந்துவிடும். இதனால் இது பிறந்த குழந்தைக்கும் வந்துவிடும என்பதால் தான் நம் முன்னோர்கள் சித்திரையில் குழந்தை பிறந்தால், குழந்தைக்கு ஆகாது என்று கூறிவந்தனர். ஆனால் அது நாளடைவில் சித்திரையில் (chithirai matham kuzhanthai piranthal) குந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என ஆயிற்று.

சித்திரையில் பிறந்த குழந்தை குணங்கள்

சித்திரையில் சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சத்தில் இருப்பார். இந்த காலக்கட்டத்தில் (chithirai matham kuzhanthai piranthal enna palan) பிறந்த குழந்தைகள் சூரிய பகவானின் முழு அருளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பொதுவாக சூரிய பகவான் அதிகார பதவியை கொடுப்பவர், இதனால் இந்த காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகள் அதிகார தோணியுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும், சமூகத்தில் அனைவரும் மதிக்கும்படி எதிர்க்காலத்தில் இருப்பார்கள்.

சித்திரையில் பெண் குழந்தை பிறந்தால்?

சித்திரையில் ஆண் குழந்தை பிறந்தால் கூட பரவாயில்லை என்றும், ஆனால் பெண் குழந்தை மட்டும் பிறக்கவே கூடாது என மற்றவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் இந்த காலக்கட்டத்தில் பிறந்த பெண்கள் உண்மையை நேரடியாகவும், தைரியமாகவும் பேசிவிடுவார்கள். யாருக்கும் பயமில்லாமல் இருப்பார்கள். இதனால் இவர்களை திருமணம் செய்ய சற்று யோசிப்பார்கள். இந்த காலத்தில் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என சில வரமுறைகள் இருந்தது. அதனால் இந்த காலக்கட்டத்தில் பிறந்த பெண்கள் தைரியமாக இருப்பார்கள் என கூறுவார்கள்.

மேலும் படிக்க: 100+ Beautiful Baby Girl Names in Tamil..! பெண் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள்..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago