தமிழ் சினிமாவில் வருடம் தோறும் பல படங்கள் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. ஆனால் சில படங்கள் மட்டும் தான் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது போன்ற படங்களில் முக்கிய இடத்தை பிடித்த படம் தான் ஜெய்பீம் (Jai Bhim Movie). இந்த படம் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லியோமோஸ் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனத்தின் மூலம் அவரே தயாரித்தார். இந்த படத்தில் பல காட்சிகள் (Jai Bhim Movie Secrets) மக்களை கலங்க வைக்கும் முறையில் இருக்கும் அவற்றில் முக்கியமான ஒரு காட்சி தான் மணிகண்டன் கண்ணில் மிளகாய் தூள் காட்சி. இந்த காட்சி ஒரு நொடி மக்களை உறைய வைத்தது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் தான் தற்போது இந்த காட்சி எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவலை (Actor Manikandan Recent Interview) மணிகன்டன் கூறியுள்ளார்.
இந்த படத்தில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன் ஜெய்பீம் படத்தில் இறந்து விட்டதா காட்டுவர். அப்போது காவல் அதிகாரிகள் சேர்ந்து அவருக்கு உயிர் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க மிளகாய் பொடி கொட்டுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். இது குறித்து அவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் போலீஸ் என்னை எட்டி மிதிப்பார்கள் அப்போது நான் விழுந்து இறந்துவிடுவேன். நான் இறந்துவிட்டேன் என்பதை கண்டுபிடிக்க கண்ணில் மிளகாய் பொடி தூவுவார்கள்.
அந்த காட்சிக்காக கண்ணை சிவப்பாக்கி கண்ணீர் வர வைக்க என்ன பயன்படுத்தலாம் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருந்தோம். அதற்கு கிளிசரின் அல்லது சாக் பவுடர் என எதை பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் கேமராமேன் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கண்ணை விரிப்பது போல மட்டும் காட்டுகள், ஷாட் எடுப்போம் மீதியை எடிட்டிங்கில் பார்த்துக் கொள்வார்கள் என்று கூலாக சொன்னார் என்று கூறியுள்ளார். மேலும் அந்த ஷாட் அப்படிதான் எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: மீண்டும் ஒரு காதல் கதை..! மௌனராகம் சீரியலால் இணைந்த ஜோடி..! இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…