கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் சீதா ராமம். இப்படம் மூலம், இப்படத்தின் கதாநாயகியான மிருனாள் தாகூர் பிரபலம் ஆனார்.
இவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். Mrunal Thakur 2012-ம் ஆண்டு, ஹிந்தி சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். இதன் பிறகு 2014-ம் ஆண்டு மராத்தியில் கதாநாயகதியாக அறிமுகமானார். இவரின் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை பெற்றார்.
இதன் பிறகு இயக்குனர் சோனியா குப்தா 2018-ம் ஆண்டு, பாலியல் தொழிலாளர்கள் வாழ்க்கையை விவரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட Love Sonia படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில்,அறிமுகமானார் மிருணாள் தாகூர். இதன் பிறகு இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது ‘சீதா ராமம்’ திரைப்படம் தான். சமீபத்தில் Sita Ramam படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை மிருணாள் தாக்குர் பெற்றார்.
இந்த விருது வழங்கும் விழாவில் விருதை அளித்த அல்லு அரவிந்த், மிருணாள் தாகூர் தெலுங்கு மணமகனைப் பார்த்து சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறினார்.
இதன் பிறகு மிருணாள் தாகூர் தெலுங்கு நடிகரை திருமணம் செய்யபோகிறார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய Mrunal Thakur, நான் தெலுங்கு நடிகரை காதலிக்கவில்லை, திருமணம் செய்யவில்லை. அந்த விழாவில் Allu Aravind விளையாட்டாக தான் பேசினார் என விளக்கம் அளித்துள்ளார்.