இந்திய அளவில் அதிக அளவிலான மக்களால் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்களில் ஒன்று தான் கை மற்றும் கால்களில் கயிறு கட்டுதல். இது பல காரணங்களுக்காக பல்வேறு தரப்பிலான மக்களால் கட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்போது இரு சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
ஆனால் நம் ஜோதிட சாஸ்திரப்படி கருப்பு கயிறு எல்லோருக்கும் அமைவதில்லை. எனவே எல்லோரும் அதனைப் பயன்படுத்தக்கூடாது. இந்த கருப்பு கயிற்றை பயன்படுத்த சில விதிகள் உள்ளது. இவற்றை நாம் பின்பற்றும் போது தான் நன்மைகள் நடக்கும். அவற்றை மீறும் போது வாழ்வில் சில எதிர்மறையான விளைவுகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. அது குறித்து இப்பதிவில் (Black Thread in Leg Benefits In Tamil) பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரங்களின் படி கருப்பு கயிறு மகரம், துலாம், கும்பம் போன்ற ராசியினருக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது (Benefits Of Wearing Black Thread in Leg). அதுமட்டுமின்றி இந்த மூன்று ராசிகளில் பிறந்தவர்கள் எந்தவித சந்தேகமும் இன்றி கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறுகளை அணியலாம். ஆனால் விருச்சிகம் மற்றும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறம் அந்த அளவிற்கு ஒத்துபோகாது.
இதனை ஜோதிட சாஸ்திரங்களின் படி செவ்வாய் இந்த இரண்டு ராசிகளும் கட்டுப்படுத்துகிறது. எனவே கருப்பு நிறம் அவர்களுக்கு உகந்தது அல்ல. இந்த ராசி காரர்கள் கருப்புக் கயிறு அணிவதால் மனது ஒருநிலையாக இருக்காது என்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கருப்பு கயிற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தகவல்கள் (Black Thread Benefits) மற்றும் விதிகள் உங்களுக்குத் தெரிந்தால் அதைனை பின்பற்றவும்.
இந்த கயிற்றை கட்டுவதற்கு முன் நான்கு முடிச்சுகள் போடவும். மேலும் அந்த கயிற்றை ஒரு நல்ல நாளின் ஒரு நல்ல நேரத்தில் அதிலும் குறிப்பாக பிரம்மா காலத்தில் கட்டினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று கூறுகின்றனர். மேலும் இந்த கயிற்றை கட்டுவதற்கு முன் முதலில் ருத்ர காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அல்லது குல தெய்வத்தை நினைத்து கட்டலாம்.
கருப்பு கயிறு கட்டுவதற்கு முன் கையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிற கயிறு கட்டி இருந்தால் கருப்பு கயிறு அணிய வேண்டாம். சனிக்கிழமையில் கருப்பு கயிறு அணிவது மிகவும் நல்லதும என்று கூறுகின்றனர். சனிக்கிழமை சனிக்கு உரியது என்பதாலும் அவருக்கு கருப்பு நிறம் பிடிக்கும் என்பதாலும் கருப்பு கயிறு அணிந்து ருத்ர காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் அந்த கறுப்புக் கயிற்றின் வலிமை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: Panimaya Matha: புனித பனிமய மாதா கோயில் பவள விழா கொடியேற்றம்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…