தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக இருப்பவர் அமீர். தன்னுடைய வித்தியாசமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் Director Ameer. இவரின் தனித்துவமான படைப்புகளால் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அவர் தற்போது பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார்.
இவர் இயக்குனர் பாலாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மெளனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் சூர்யா-வை அதுவரை யாரும் பார்க்காத கோணத்தில் அழகாக காட்டிருந்தார் அமீர். இந்த படம் காதல் கதை களமாக கொண்டபோதிலும் அவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை அந்த படம் ஏற்படுத்தி கொடுத்தது.
அதன் பிறகு அவர் ஜீவா-வை வைத்து ராம் படத்தை இயக்கி இருந்தார். அது நல்ல வசூலை கொடுக்காவிட்டாலும், நல்ல விமர்சனங்களை பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு அவர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன் திரைப்படம் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் அவரை கொண்டு போய் சேர்த்தது. அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமல்லாமல் தேசிய விருதுகளையும் குவித்தது. அதன்பின் அமீர் இயக்கிய திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அதனால் அவர் நடிகராக தற்போது நடித்து வருகிறார்
கோபத்தில் எடுத்த முடிவு
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது படத்தை இயக்குவது தான் எனக்கு முதன்மையான ஒன்று என கூறியுள்ளார். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. எனக்குள் இருக்கும் இயக்குனருக்கான கனவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. நான் நடிகனாக வேண்டும் என்பது நான் கோபத்தில் எடுத்த முடிவு. நான் விருப்பப்பட்டு எடுத்த முடிவு கிடையாது. ஆனால் என்னை தேடிவரும் மனிதர்களின் மேல் நான் வைத்துள்ள மரியாதையின் காரணமாகவே நான் நடிக்கிறேன். மற்றப்படி எனக்கு நடிப்பில் எந்தவித ஆர்வமும் இல்லை என கூறியுள்ளார்.
ரூ.1 லட்சம் செலவு
அவர் இயக்கிய ராம் திரைப்படத்தின் போது அவர் செய்த ஒரு செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ராம் திரைப்படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்ற போது அமீர் தன்னுடைய மேனேஜரை அழைத்து நான் மதுரைக்கு போயிட்டு வருவதாக கூறி சென்றுவிட்டாராம். அனைவரும் இயக்குனரான அமீர் சீக்கிரம் வந்துவிடுவார் என நினைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்துக்கொண்டிருந்தனர். மேலும் அவர் பணம் வாங்க சென்றிருப்பதாக மேனேஜர் நினைத்த வேளையில், அமீர் ஃபோன் செய்து அனைவரையும் அவர்களது ரூமிற்கு போக சொல்லிவிட்டு மறுநாள் ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
மதுரையில் இருந்து திரும்பி வந்த அமீரிடம் மேனேஜர் பணம் வாங்கிட்டிங்களா என்று கேட்க, அமீர் நான் பணம் வாங்க போகவில்லை விருமாண்டி படம் பார்க்க போனேன் என்று கூறியிறுக்கிறார். இதனை கேட்ட மேனேஜர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். காரணம் ஒரு நாள் ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட்டால் கிட்டதட்ட 1,50,000 செலவு ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.