அட்சயம் (akshaya tritiya meaning in Tamil) என்றால் தேயாது, குறையாது என்று பொருள். இந்த நாளில் நாம் எது செய்தாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை (what to do on Akshaya tritiya in Tamil) இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். சமணர்களை பொறுத்தவரை சமண தீர்த்தகரங்கர்களுள் ஒருவராகிய ரிசபதேவர் நினைவு நாளாக பார்க்கிறார்கள். தமிழ் மாதமான சித்திரை வளர்பிறையில் வரும் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்த நாளில் பலரும் தானம் வழங்கி புண்ணியங்களை சேர்ப்பார்கள். ஒரு சிலர் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள்.
முதல் யுகமாக பார்க்கப்படும் கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவிக்கப்பட்ட நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் ஜோதிட ரீதியாக இந்து மக்கள் பார்க்கிறார்கள். சொர்க்கத்தில் இருந்து புனித நதியாக கங்கை (பூமிக்கு) இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது.
இந்த அட்சய திருதியை இந்த ஆண்டு 2024 மே 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் நாம் எது செய்தாலும் அது பத்து மடங்காக பெருகும் என்று கூறுவார்கள். அது நேர்மறையாக இருந்தாலும், எதிர்மறையாக இருந்தாலும் அந்நாளில் நாம் எது செய்தாலும் பத்து மடங்காக பெருகும் என்று கூறுவார்கள். எனவே அட்சய திருதியை அன்று செய்யக்கூடியவை (Akshaya tritiya significance in Tamil) மற்றும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கலாம். அன்று தங்கம் வாங்கினால் வருடம் முழுவதும் செல்வத்தை கொடுக்கும். உங்கள் வீட்டில் பொருளாதார நிலை நல்வாழ்வு கிடைக்கும். அதனால் இந்நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும்.
இந்நாளில் வாகனம் வாங்கினாலும் சிறந்தது. தங்கம் மட்டுமன்றி கார் மற்றும் மோட்டார் பைக் போன்றவற்றை வாங்கினால் பாதுகாப்பான பயணத்தை இந்நாள் உறுதிசெய்யும். வாகனம் வாங்க நினைத்தால் இந்நாளில் வாங்குவது சிறந்தது.
புதிய வீடு வாங்கலாம். இந்நாளில் புதிய வீடு வாங்குவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் வீடு கிரஹ பிரவேஷம் செய்தால் தீய சக்திகள் நம்விட்டு விலகும்.
இதுபோன்ற பொருட்கள் மட்டுமல்லாமல் ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை தொடங்கினால், அந்த காரியம் முழுமையாக வெற்றி அடையும். நீங்கள் தொடங்கும் காரியமும் எவ்வித சிக்கல் இல்லாமல் முடியும்.
அட்சய திருதியை (Akshaya Tritiya in tamil) அன்று வீடு இருளாக வைத்திருக்க கூடாது. அன்று விளக்கேற்றி வெளிச்சதை கொண்டு வாருங்கள்.
அட்சய திருதியை அன்று கோபம் கொள்ள வேண்டாம். ஏனென்றால் இந்நாளில் கோபம் கொண்டு பிறர் மனதை புண்படுத்தும் எந்த செயலும் நாம் செய்யாமல் இருப்பது சிறந்தது.
மேலும் படிக்க: Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று இதை செய்தாலே போதும்..! வீட்டில் செல்வம் பெருகும்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…