இந்தியாவில் மக்களவை தேர்தல் (Parliamentary Election) நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே வெளியானது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை (Post Election Polls) ஜூலை 1 ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் 18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த மக்களவை தேர்தலுடன் (Lok Sabha Election) சேர்த்து ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும், 12 மாநிலங்களுக்கான 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இருதி முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிட கூடாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் எதிலும் வெளியிட கூடாது என்று தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த பிறகு எந்த கருத்துக் கணிப்பு (Bans Post Election Polls Result) முடிவுகளையும் ஊடகங்கள் வெறியிடி கூடாது எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதால் தேர்தல் முடிந்த மாநிலங்களில் கருத்துக் கணிப்பு வெளியானால். அது மற்ற இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…