தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பல வருடம் ஆட்சி புரிந்தவர் தான் கலைஞர் கருணாநிதி. அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி வயது முதிர்வு மற்றும் சில உடல்நல பிரச்சனைகள் காரணமாக காலமானார். அதன் பிறகு கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது. அதன் பிறகு திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை மெரீனாவில் நினைவிடம் (Karunanidhi Ninaividam) அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் இந்த முடிவு குறித்து பேசும் போது, கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பில் அவருக்கு நினைவிடம் (Karunanidhi memorial) அமைக்கப்படும் என்று கூறினார்.
அதன் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த நினைவிடமானது கடந்த ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் இவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பேனா சிலை மற்றும் நினைவிடத்தின் பணிகள் முடிவடையாத காரணத்தால் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த நினைவிடம் திறப்பு விழா தேதி (Karunanidhi Ninaividam Thirappu Vizha Date) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு விழா (Karunanidhi memorial Inauguration) வரும் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: வங்கிக் கணக்கில் ரூ.6000 வரபோகுது..! ரெடியா இருங்க..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…