Homeசினிமாரணங்கள் ரத்தமாய் தெறிக்க வெளியானது விஷால் 34 படத்தின் டைட்டில் மற்றும் டீசர்..!

ரணங்கள் ரத்தமாய் தெறிக்க வெளியானது விஷால் 34 படத்தின் டைட்டில் மற்றும் டீசர்..!

விஷால் மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஷாலின் 34 வது படம் ஆகும். இப்படம் டைட்டில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் செப்டம்பர் 15-ல் வெளியான மார்க் ஆண்டனி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் கதை டைம் டிராவல் அடிப்படையாகக் கொண்டு இருந்தது. இதனை அடுத்து Vishal 34 Movie Update வெளியாகியுள்ளது.

Vishal Movies Tamil

மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் அருந்த நிலையில் Vishal 34 என இப்படம் தற்காலிகமாக அழைக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரத்னம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஷால். முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் தாமிரபரணி படம் வெளியானது. இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. பிறகு 2014 ஆம் ஆண்டு பூஜை படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதன் பிறகு தற்போது விஷாலின் 34 படமான ரத்னம் படத்தில் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

Rathnam படத்தை ஸ்டோன் பெஞ்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை ஏப்ரல் மாதத்தில் போடப்பட்டு ஜூலை மாதம் 15 ஆம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு DSP என அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Vishal Movie New

ரத்னம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் நேற்று (டிசம்பர் 1) வெளியானது. 2 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ”கண்ணீர் செந்நீராக.. குரோதம் குருதியாய்… உக்ரம் உதிரமாய்.. ரணங்கள் ரத்தமாய்…” என்ற வரிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்த வருடம் (2024) கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular