குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் அதிக அளவில் வசூல் செய்வது ஒன்றும் தமிழ் சினிமாவில் புதிது அல்ல. இப்படி பல படங்கள் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக லாபத்தை கொடுத்துள்ளது. இப்போது இந்த வரிசையில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஜோ படமும் இடம் பிடித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு வெளியாகிய ஜோ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வறவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் 4-வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு உள்ளது. இப்படத்தினை ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாகவும் மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி கடந்த நவம்பர் மாதம் 24-ஆம் தேதி வெளியானது. இந்த படம் முழுமையாக காதல் கதையை மையப்படுத்தியுள்ளது. இந்த கதைகளம் நன்றாக இருப்பதால் படம் மக்களுக்கு பிடித்துப்போனது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: அயலான் படத்தின் ஏலியன் குரல் யாருடையது தெரியுமா? |
இதன் மூலம் விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை இப்படம் பெற்றுள்ளது. மேலும் விமர்சனம் மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இந்த படம் வெளியாகியது முதல் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் ஜோ திரைப்படம் 6.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இன்னும் படம் திரையரங்குகளில் ஓடி வருவதாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள காரணத்தால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திரைபடத்தின் மாபெரும் வெற்றியால் இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது. ஓடிடியில் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. எனவே, திரையரங்குகளில் படம் பார்க்க முடியாதவர்கள் ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: 21 வருடங்களை கடந்த மெளனம் பேசியதே..! இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறது..! |