தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சில வருடங்கள் முன்பு வரை தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதன் பின்னர் அவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் தற்போது நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
இப்போது அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரது படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 36 வயதினிலே, ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் மலையாளத்தில் காதல் தி கோர் என்னும் படத்திலும், ஹிந்தியில் சைத்தான் படத்திலும் நடித்துள்ளார்.
சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் பயின்று வரும் நிலையில் அவர்கள் சினிமாவில் நடிப்பது பற்றி தனது கருத்தை ஜோதிகா (Suriya Son Dev in Cinema Industry) கூறியுள்ளார். இந்நிலையில் தான் ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய பேட்டியில் ஜோதிகா கலந்துக்கொண்டுள்ளார். அப்போது அவரிடம் உங்கள் மகன் தேவ் சினிமாவில் நடிப்பாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், நிச்சயம் அவர் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் தற்போது எட்டாம் வகுப்பு தான் படித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து இதுகுறித்து பேசிய அவர் தங்களது மகன், மகள் இருவருமே தற்போது படிப்பின் மீது தான் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் ஒருவேளை அவர்கள் படித்து முடித்த பிறகு நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களின் விருப்பம் என கூறியுள்ளார். எனவே சூர்யா ஜோதிகாவின் மகன் (Suriya Son Dev) மற்றும் மகள் சினிமாவில் நடிப்பார்களா என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்: விஜய் டிவிக்கு குட்பை சொன்ன அறந்தாங்கி நிஷா.. புதிய தொழில் தொடங்கினாரா? |