மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் Mammotty. நான்கு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கியவர். வெள்ளை வேஷ்டி மற்றும் கோடு போட்ட சட்டை அணிந்து எளிமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மம்மூட்டி.
மதிலுக்குள், வடக்கன் வீர கதா, பொந்தன் மடா, விதேயன், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் வாங்கியுள்ளார்.
மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 360 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது. கேராளாவில் சொந்த நிலங்களும் மற்றும் பண்ணை வீடுகள் உள்ளன.
அவர் மூன்றாம்பிறை வாழ்பவனுங்கள் (Moondram Pirai Vazhavanubhavangal) என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள செய்தி ஒன்று அவரின் ரசிகர்களின் மனதை உருக வைத்துள்ளது. அதில் மம்மூட்டி எனக்கு 4 தேசிய விருதுகளோ அல்லது எனது சொத்துக்களோ முக்கியம் இல்லை, எனக்கு அந்த 2 ரூபாய் நோட்டு போதும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 2 ரூபாய் நோட்டை அவர் பத்தரமாக வைத்துள்ளதாகவும் அந்த பணம் எனக்கு பொக்கிஷம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி என்ன சிறப்பு அந்த 2 ரூபாய் நோட்டு
ஒரு நாள் இரவு மம்மூட்டி காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் பதற்றத்துடன் காரை வழி மறைத்துள்ளார். ஆனால் இரவு நேரம் என்பதால் பிரச்சனை ஏதாவது வந்துவிடும் என்பதால் காரை நிறுத்தாமல் சென்று விட்டார். சிறிது தூரம் சென்ற பிறகு காரை ரிவர்ஸ் செய்து திரும்பி வந்துள்ளார்.
அவரிடம் என்ன பிரச்சனை எனக் கேட்டபோது அந்த வயதானவர் என்னுடைய மகள் வயிற்று வலியால் துடித்துத்துக் கொண்டிருக்கிறாள் என்றும், ஆனால் மருத்துவமனைக்கு செல்ல ஒரு வாகனமும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதனை கேட்ட மம்மூட்டி காரில் ஏறுங்கள் என கூறியுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகும் தான் யாரென்று அந்த நபருக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் அவர்களை இறக்கிவிட்டதும் அந்த பெரியவர் தன் கையில் இந்த 2 ரூபாய் மட்டுதான் உள்ளது இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம். அப்போது நான் 4 தேசிய விருதுகள் வாங்கிய நடிகன் என்ற எண்ணம் எண்ணை சுக்குநூறாக உடைத்துவிட்டதாகவும், நடிகர் என்றால் யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். உதவி செய்தால் மட்டும் தான் உலகம் நம்மை மதிக்கும் எனவும் புரிந்துகொண்டதாகவும், அந்த 2 ரூபாய் நோட்டை பல ஆண்டுகளாக பத்திரப்படுத்தி வைத்திரு்பதாகவும் கூறியுள்ளார்.