சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கிவரும் படம் வரலாற்று கதையை மையமாக கொண்டது, இப்படத்திற்கு கங்குவா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் 3d தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த Kanguva படம் 10 மொழிகளில் உருவாகிறது, இதில் Suriya ஐந்து விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இது பொங்கலுக்கு பான் இந்தியா படமாக ரிலீஸாக உள்ளது.
கங்குவா படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இயக்கும் பணியில் உள்ளதால் வாடிவாசல் படம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் 43 வது படம் தேசிய விருது பெறுமா
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க தயாராகிவிட்டார் இப்படம் சூர்யாவின் 43 வது படம் ஆகும். ஏற்கனவே, இருவரின் கூட்டணியில் வெளிவந்து ஏறாளமான விருதுகளை வாங்கிய திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தின் கதையும் சூர்யாவின் நடிப்பும் அருமையாக இருந்தது. இப்படத்தின் மூலம் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது, அதன் பிறகு சூர்யாவின் சினிமா மார்க்கெட் கூடியது. மறுபடியும் இவர்கள் கூட்டணியில் தயாராகும் படம் மீண்டும் ஒரு தேசிய விருது வாங்க வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட சூர்யாவின் படம்
சூர்யாவின் 43 வது படத்திற்கு புறநானூறு என டைட்டிலை படக்குழுவினர் வைத்திருக்கின்றனர். இப்படம் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது என கூறப்படுகிறது இதன் காரணமாகவே இதற்கு சுத்த தமிழில் பெயர் வைத்துள்ளனர்.
1965 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட Purananuru படத்தை 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் Sudha Kongara இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மேலும் பலர் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், இது இவர் இசையமைக்கும் 100 வது படம் ஆகும்.
புறநானூறு படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதிரியான உண்மை சம்பவ கதைகள் மற்றும் தமிழ் மக்களை பெருமைப்படுத்தும் விதமான படங்களாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும். எனவே தற்போது சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தை புறநானூறு படம் மிஞ்சுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த வகையில் Purananooru படம் தேசிய விருதை வாங்க கூடும் என கருதப்படுகிறது.