HomeசினிமாPushpa 2: அல்லு அர்ஜுன் சம்பளம் இத்தனை கோடியா.. எவ்வளவு தெரியுமா?

Pushpa 2: அல்லு அர்ஜுன் சம்பளம் இத்தனை கோடியா.. எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு திரைபட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்து இறுதியாக வெளியாகிய படம் புஷ்பா. இப்படம் 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தினை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இதுமட்டுமின்றி இப்படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடிகை சமந்தா நடனம் ஆடிருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சமந்தாவின் நடனம் அமைந்திருந்தது. இப்படத்துக்கு DSP இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆனது.

குறைந்த பட்ஜெட்டில் உருவான புஷ்பா முதல் பாகம் அமோக வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப் படக்குழு தயாராகிவருகிறது. இப்படத்தினை அண்மையில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற கே.ஜி.எஃப்- 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் போன்ற தென் இந்தியப் படங்களை போல தொழில்நுட்பம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டுவர படக்குழு முடிவெடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. புஷ்பா முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தினை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து. புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. புஷ்பா 2 திரைப்படம் அதன் முதல் பாகத்தைவிட பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

Pushpa 2

இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு Pushpa 2 படத்தில் அல்லு அர்ஜுனின் சிறப்பு தோற்றம் கொண்ட போஸ்டரும் வெளியானது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த போஸ்டருக்கு பிறகு புஷ்பா 2 படம் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்திற்கு Allu Arjun வாங்கியுள்ள சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் புஷ்பா-1 படத்தில் நடிக்க 45 கோடி சம்பளமாக வாங்கினார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி உள்ளாராம். இதன்படி புஷ்பா 2-விற்காக இவர் ரூ.85 கோடி சம்பளமாக வாங்கி இருப்பார் என கூறப்படுகிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க மற்றொரு தரப்பினர், இதுவரை புஷ்பா-2 திரைப்படத்திற்காக சம்பளம் எதும் வாங்கவில்லை என்றும், அதற்கு மாற்றாக படத்தின் வெற்றியில் வரும் லாபத்தில் 33% -ஐ தனது சம்பளமாக வாங்க முடிவு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்த புஷ்பா-2 திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெறும் என நம்பப்டுகிறது. இப்படம் ஒட்டுமொத்தமாக 1000 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், 330 கோடி வரை அல்லு அர்ஜுனின் சம்பளம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த அளவுக்கு வசூல் இல்லாவிட்டாலும், அல்லு அர்ஜுனின் சம்பளமானது 250 – 300 கோடி இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மை என்றால் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களான ரஜினி, விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளி அல்லு அர்ஜுன் முதலிடத்தில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular