கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு கட்சிகளால் பல தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. அதில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். திமுக கட்சி ஆட்சி அமைத்த பின்னர் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) என்னும் திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல இல்லத்தரசிகள் பயணடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் தற்போது இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தான் இந்த திட்டத்தில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தான் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளதாக தகவல் (Magalir Urimai Thogai New Update) வெளியாகியுள்ளது.
அதன் படி இந்த திட்டம் 105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த பெண்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக சுமார் 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தபட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் இந்த திட்டம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1.60 கோடி பேர் இத்திட்டதிற்கு விண்ணப்பித்தனர். அதில் 1.16 கோடி பேருக்கு இப்போது தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் பணம் கொடுக்கப்படாமல் போன மற்றவர்களுக்கும் இன்னும் 2 முதல் 3 மாதத்தில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இப்போது தேர்தல் என்பதால் கடினம் என்றும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் இதற்கு முன்னர் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த முறை அவர்களுக்கும் பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: மாம்பழம் வாங்க போறீங்களா? உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…