மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் திமுக கட்சியின் சார்பாக திருவண்ணாமலையில் போட்டியிடும் அண்ணாதுரையை ஆதரித்து இன்று மார்ச் 26 -ஆம் தேதி உதயநிதி பிரச்சாரம் (Udhayanidhi Pracharam) செய்தார்.
அப்போது பேசிய உதயநிதி, பிரதமர் மோடி திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என்று கூறுகிறார். ஆமாம் அவர் சொல்லுவது போன்று எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. நாங்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க போவதில்லை என்று கூறினார்.
திருவண்ணாமலையில் போட்டியிடும் அண்ணாதுரையை ஆதாதரித்து (Tiruvannamalai DMK Vetpalar 2024), அவருக்கு வாக்கு கேட்டு கலைஞர் பேரன் வந்திருக்கிறேன். அவரை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று கேட்டார். அவ்வாறு வெற்றி பெற செய்தால் நான் மாதம் 2 முறை இந்த தொகுதிக்கு வந்து தங்கி தொகுதியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்வேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் எதிர்க்கட்சி தலைவர் எப்போது பார்த்தாலும் உதயநிதி (Udhayanidhi Stalin) செங்கல் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு வேலையில்லாமல் காண்பித்து வருவதாக கூறி வருகிறார். நான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை காண்பித்து தான் வருவேன் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் மோடியுடன் சிரித்துக்கொண்டு கூட்டணி வைத்து மாநிலத்தின் மொழி உரிமை மற்றும் நிதி உரிமையை தாரைவார்த்து கொடுத்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார்.
தற்போது தேர்தல் என்பதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். ஆனால் மழை, வெள்ளம் வந்த போது பிரதமர் மோடி எங்கு சென்றார். மழை, வெள்ளத்தில் முதலமைச்சர் தான் மக்களுக்கு உதவிகளை செய்தார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் திருவண்ணமலை தேர்தல் அறிக்கையில் (Tiruvannamalai DMK Therthal Pracharam 2024) கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறவேற்றப்படும் என்று கூறினார்.
மேலும் படிக்க: முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரே தொகுதியில் பிரசாரம்… எந்த ஊர் தெரியுமா? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…