தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து தற்போது அரசியலில் குதித்து அமைச்சராக இருப்பவர் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
கடந்த வருடம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிப்பெற்றது. அதன் பிறகு நடிகர் சங்கத்திற்கு மிகப்பெரிய கட்டிடம் கட்ட முடிவு செய்தது. இதற்காக சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நிதி நெருக்கடி காரணமாக திடீரென இந்த கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிறது. இதன் காரணமாக நடிகர் சங்க உறுப்பினர்கள் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உதவும் விதத்தில் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் விஷால், கார்த்தி மற்றும் கருணாஸ் ஆகிய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் ரூபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார். மேலும் இதற்கு தெரிவிக்கும் விதமாக தென்னெந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஷால் வெளியிட்டுள்ள பதிவில் “அன்புள்ள உதயா, எங்கள் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உங்கள் பங்களிப்பிற்காகவும், முடிந்தவரை விரைவாக கட்டிடம் கட்டும் பணிகளை முடிக்க உதவ முன் வந்ததற்காகவும் நண்பர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தற்போதைய தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்: நாளை நாடு முழுவதும் பந்த்..! பள்ளிகளுக்கு விடுமுறை பற்றிய தகவல்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…