பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உதாரணமாக நம் வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பாம்பை கண்டால் பதறி ஓடி வந்து விடுவோம். சில சமயம் அந்த பாம்பை பிடிப்பதற்கு பாம்பு பிடிப்பவர்களை அழைத்து பிடித்துவிடுவோம். அந்த பாம்பை பிடித்த பிறகு தான் நமக்கு நிம்மதி ஏற்படும். அந்த அளவிற்கு பாம்பு என்றால் அனைவருக்கும் பயம்.
நமக்கு சில சமயம் தோன்றும் இந்த பாம்பு பிடிப்பவர்கள் மட்டும் எவ்வாறு இவ்வளவு தைரியமாக பாம்பை பிடிக்கிறார்கள் என்று. காரணம் அவர்கள் முறையான பயிற்சி பெற்று பாம்பு பிடிக்கிறார்கள். இதனால் பாம்பை கண்டால் அதன் அருகில் செல்லாமல் பாம்பு பிடிப்பவர்களை தொடர்பு கொண்டு அதனை பிடித்து விடலாம்.
இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், எவ்வளவு விஷமான பாம்பாக இருந்தால் அதன் முன் தைரியமாக நின்று சண்டையிடும் ஒரு விலங்கு தான் கீரி. பொதுவாக ஒரு வீட்டில் குழந்தைகள் சண்டியிட்டுக்கொண்டால் ஏன் பாம்பு, கீரி போல சண்டை போட்டு (Mongoose Snake Fight in tamil) கொள்கிறீர்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால் கீரிக்கு பாம்பு என்றார் ஆகவே ஆகாது. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடந்தால் அதில் அதிகளவு வெற்றி பெறுவது கீரியாக தான் இருக்கும்.
எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் தன்னுடைய விஷத்தின் மூலம் கொல்லும் பாம்பு. அனால் கீரியை ஏன் கொல்ல முடியவில்லை. பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்யாமல் இருக்க காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்யாமல் இருக்க காரணம், கீரியின் உடலில் அசிட்டைல்கோலின் என்ற ஒரு வேதிப்பொருள் சுரக்கிறது. இந்த வேதிப்பொருள் தான் பாம்பின் விஷத்தை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கீரியின் தோல் மிகவும் கடினமான தோல், அவ்வளவு எளிதாக பாம்பின் பற்கள் கீரியின் உடலில் பதியாது. கீரியின் உடலில் இருக்கும் க்ளைக்கோபுரோட்டின், பாம்பின் விஷத்தில் இருக்கும் புரோட்டினை சமன் செய்து விடுவதால், பாம்பின் விஷத்தால் கீரிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை.
மேலும் படிக்க: Erumbu Palangal: உங்கள் வீட்டில் கருப்பு எறும்பு வருகிறதா? ஜோதிடம் சொல்லும் எறும்பு சாஸ்திரம்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…