ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலைமச்சரின் மாநில இளைஞர் விருது (Manila Ilaignar Nala Viruthu 2024 ) வழங்கப்படுகிறது. இதில் 15 வயது முதல் 35 வயது வரை 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
அந்த வகையில் இந்தாண்டு 2024 ஆம் ஆண்டிற்கான விருதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொடுக்கப்பட உள்ளது. இந்த விருதை பெறுபவர்களுக்கு ரூ.1,00,000 ரொக்கமும், பாராட்ட பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும். சமுதாயத்திற்காக, சமுதாய பணிக்காக சேவையாற்றும் இளைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் வருவதால், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வேண்டி விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று சென்னை கலெட்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்தரதின்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படும்.
இந்த ஆண்டு 2024 முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர் வரும் 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு (State Youth Award in TN 2024) விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழங்களில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. உள்ளூர் மக்களிடம் செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 1.5.2024 முதல் கடைசி நாள் 15.5.2024 மாலை 4 மணி வரை ஆகும். இதற்கு விண்ணப்பிபதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in) என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவர், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா,சென்னை-84 அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண்.7401703480 அல்லது 044-26644794 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க: தமிழகத்தில் தேர்தல் முடிந்தாலும்… சோதனைகள் தொடரும்… |