Homeசெய்திகள்மாணவர்களை அடித்த நடிகை கைது..! காரணம் தெரியுமா?

மாணவர்களை அடித்த நடிகை கைது..! காரணம் தெரியுமா?

சென்னையில் நேற்று அரசு பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை தாக்கிய பாஜக பிரமுகர் நடிகை ரஞ்சனா நாச்சியார் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று குன்றத்தூரில் இருந்து போரூர் சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வழக்கறிஞரும் துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் அரசு பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தினார். பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை பேருந்தில் இருந்து அடித்து இறக்கியுள்ளார். மேலும் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை ஒருமையில் அவதூறாக பேசியும் உள்ளார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Actress Arrested for Beating Students

Actress Ranjana Nachiyaar -ன் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவுகள் மற்றும் எதிர்ப்புகள் வந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் சரவணன் ரஞ்சனா நாச்சியார் மீது புகார் தெரிவித்துள்ளார். மாணவர்களைத் தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது அதாவது பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அவதூறாக திட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுச் செய்யது மாங்காடு போலீசில் இன்று காலை ரஞ்சனா நாச்சியாரை அவரது வீட்டிற்கு சென்று Arrest செய்யதனர்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular