இன்று தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமாரி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், திருச்சி, திருவண்ணமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிபேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை,கோயம்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 31.10.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் 1.11.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2.11.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோன்று கன்னியாக்குமாரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி போன்ற ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 4.11.2023 முதல் 5.11.2023 வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழை வரை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் நகரின் ஒர சில இடங்களில் லேசான முதல் மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.