திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெரும் திருகோவில் நிரந்தர பணியாளர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல் 1 ஆம் தேதி 42% ஆக Dearness Allowance உயர்த்தப்பட்டிருந்த நிலையில் கோவில் பணியாளர்கள் அகவிலைபடியை மேலும் உயர்த்த கூறியதால், அரசு ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படியை 46% ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
பகுதி நேரம், தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த Aakavilaipadi 4 சதவீத உயர்வு பொருந்தாது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை அனைத்து சார்நிலை அலுவலர்களும் முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.