Homeசெய்திகள்விஜய் டிவிக்கு குட்பை சொன்ன அறந்தாங்கி நிஷா.. புதிய தொழில் தொடங்கினாரா?

விஜய் டிவிக்கு குட்பை சொன்ன அறந்தாங்கி நிஷா.. புதிய தொழில் தொடங்கினாரா?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கபோவரு யாரு நிகழ்ச்சியில் தன் நகைச்சுவையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. இவரின் நகைச்சுவைக்கே தனி ரசிகர்கள் இருந்தனர்.

அதுமட்டமல்லாமல் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்சியில் பங்கேற்றார். அதில் அவர் ஒரு நாள் சம்பளமாக ரூ.2 லட்சம் வரை பெற்றார் என்ற தகவலும் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது கிடைத்தன. அதில் அவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அறந்தாங்கி நிஷா, மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். அவரின் செயல்களை மக்கள் வெகுவாக பாராட்டி வந்தனர். மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, தண்ணீர் என்று தன் ஊரான திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து தாம்பரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கி உதவி செய்தார். இதனால் மக்கள் அவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போது அறந்தாங்கி நிஷா புதிய தொழில் தொடங்கி உள்ளதாக (Aranthangi Nisha New Business) தகவல் கிடைத்துள்ளது. அதனை அறந்தாங்கி நிஷாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அறந்தாங்கி நிஷா, சொந்தமாக ஒரு துணிக்கடை ஒன்றை திறந்து இருக்கிறார். அதனை அவர் வீடியோவாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் இனி உங்களை விஜய் டிவியில் பார்க்க முடியாதா (Vijay tv aranthangi nisha) என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: நீ நான் காதலில் இணையும் சிறகடிக்க ஆசை ஹீரோ…
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular