உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று தான் டிவிட்டர். இந்த செயலி அனைத்து தரப்பினராலும் அதிக அளவில் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்த டிவிட்டர் இணையதளமானது தற்போது எக்ஸ் இணையதளம் என மாற்றப்பட்டது.
இந்த எக்ஸ் தளத்தை மெட்டா நிறுவனம் வாங்கியதிலிருந்து அதனுடைய உரிமையாளரான எலான் மஸ்க் பல புதிய அப்டேட் மற்றும் பல விதமான மாற்றங்களையும் கொண்டு வருகிறார். அதில் முக்கிய மற்றும் முதல் மாற்றம் ட்விட்டர் என்று பெயரை எக்ஸ் என்று மாற்றம் செய்தார்.
அதனை தொடர்ந்து பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் தற்போது இந்த வலைதளத்தின் பணம் பரிமாற்றம் (Twitter (X) Money Transfer) செய்யும் வசதியை கொண்டு வரப்படவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம் (X App Money Transfer) செய்யும் வசதி விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய அப்டேட் பற்றி எலான் மஸ்க் கூறுகையில், எக்ஸ் தளத்தின் மூலம் பயனர்கள் பண பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளோம் என்றும் இதற்கான உரிமத்தினை பெற அரசாங்கம் ஒப்புதல் அளிக்க காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும் அரசாங்கம் ஒப்புதல் தந்தவுடன் எங்களுடைய எக்ஸ் தளத்தின் மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: Whatsapp New Update: இனி இதையும் ஷேர் பண்ணலாம்..! |
இதற்கான ஒப்புதல் வரும் 2024-ம் ஆண்டில் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனால் 2024-ம் ஆண்டின் நடுப்பகுதியில் பயனர்கள் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்த் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
மேலும் வழக்கமாக மக்கள் பணம் பரிமாற்றம் (Money Transfer) செய்ய அதிக அளவில் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த பண பரிமாற்றம் எக்ஸ் தளத்திலேயே கொண்டுவரப்படவுள்ளது என்ற தகவல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: UPI பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! இத செயலைனா உங்க UPI ID Block தான்..! |