கடந்த சில மாதங்களாக தமிழக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில் தற்போது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான 80 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியமைத்த நிலையில் மத்திய அமைச்சகத்தின் புலனாய்வு தலையீடுகள் அதிகமாகவே இருப்பதாக என அவ்வபோது விமர்சனங்களும் வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைப்பெற்றது. பிறகு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று (நவ 3) காலை திடீரென Income Tax Department அதிகாரிகள் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஒரே சமயத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அவருக்கு தொடர்புடைய நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்வி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், அறக்கட்டளை, அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோன்று கடந்த 2021-ஆம் ஆண்டு அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இன்று நடைபெறும் இந்த சோதனை அதன் அடிப்படையில் இருக்கலாம் என தகவல் வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்கள், ஒப்பந்தகாரர்கள், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் பிரபல காசா கிராண்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசாரை பாதுகாப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அடுத்த ஆண்டு 2024-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி இது போன்ற Income Tax Raid நடைபெறுவது வழக்கம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.