தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் (Email) மூலம் 20 கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்தியாவின் முதன்மை தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு நேற்று கொலை மிரட்டல் வந்துள்ளது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ரிலயன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவரது மின்னஞ்சலுக்கு அடையாளம் தெரியாத நபராலால் அச்சுருத்தும் வகையில் “We Will Kill You என்ற வார்த்தையுடன் ரூ. 20 காேடி கோடுக்கவேண்டும் இல்லாவிட்டால் கொன்று விடுவோம் எங்களிடம் இந்தியாவிலேயே நன்கு துப்பாக்கி சுடும் வீரர்கள் உள்ளனர்” என கூறப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து முகேஷ் அம்பானியின் மும்பை இல்ல பாதுகாப்பு அதிகாரி மும்பையில் உள்ள கம்தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்திய தண்டனை சட்டம் 387 மற்றும் 506(2) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர் போலீசார்.
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை அல்ல ஏற்கனவே கடந்த ஆண்டும் பீகார் மாநிலம் தர பாதகார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார், அந்த நபரை கடந்த ஆண்டே பீகார் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 2021 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானிக்கு வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் வெடிப்பொருட்கள் மற்றும் கொலை மிரட்டல் கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பபிடத்தக்கது.