Homeவிளையாட்டுஇந்திய அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்..! யார் தெரியுமா?

இந்திய அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்..! யார் தெரியுமா?

உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டுகளில் முக்கியமான விளையாட்டு என்றால் நம் நினைவுக்கு வருவது கிரிக்கெட் தான். அதுமட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில் பலரின் பொழுதுபோக்காக உள்ள விளையாட்டும் கிரிக்கெட் தான். இந்த நிலையில் தான் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்திய ஆடவர் அணியானது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் (Wicket keeper batsman) ரிஷப் பண்ட் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக எந்த தொடரிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்த நிலையில் தான் தற்போது ரிஷப் பண்ட் (Rishabh Pant) குறித்து ஓரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலில் பண்ட் டெல்லி அணியின் பயிற்சி முகாமில் தற்போது இணைந்து உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: இந்திய அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்…

இந்நிலையில் தற்போது ரிஷப் பண்ட் அவர்கள் ஒரு முக்கியமான கருத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது சில மாதங்களுக்கு முன்பு நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்கு தெரியும். 100% சதவீதம் வரை மீண்டு வருகிறேன் என்று நான் நினைக்கிறேன் இன்னும் சில மாதங்களில் என்னால் அதை செய்ய முடியும் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். இதனை வைத்து பார்த்தால் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பண்ட் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rishabh Pant
இதையும் படியுங்கள்: வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..! என்ன நடந்தது?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular