இந்தியாவில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். இந்த கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான IPL Cricket அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். இந்த கிரிக்கெட் விளையாட்டில் பல வகையில் தொடர்கள் உள்ளன. அவற்றில் இந்தியர்களால் மிகவும் ஆர்வத்துடன் பார்க்கப்படும் தொடர் என்றால் அது IPL Cricket தான்.
இதுவரை ஐபிஎல் பொட்டிகளில் 16 சீசன் முடிந்துள்ளது. இந்த போட்டியின் 17 வது சீசன் வரும் 2024 ஆம் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை வெற்றி பெற்றது. அதனால் CSK Team -ன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் குறித்த முக்கிய அப்டேட் என்னவென்றால் தற்போது IPL வீர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அணிகயில் விளையாடும் வீரர்களை ஏலம் எடுத்து அணியில் தக்கவைத்தும் அல்லது புதிதாக இணைத்தும் கொள்வர்.
இதன் படி பல இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 அணிகளிலும் விளையாடுவார்கள். இந்த ஏலத்தின் படி இந்தியாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள Chennai Super Kings அணியில் மீண்டும் ஒரு வீரர் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இவரை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது CSK அணி. இதன் மூலம் அவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். 2023 நடைபெற்ற கடந்த 16 வது சீசனில் Shardul Thakur கொல்கத்தா அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.