நடப்பாண்டில் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். இதில் 12th public Exam மாணவர்களுக்கு முக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்து அவர்கள் உயர்கல்வி எந்த துறையில் படிப்பது மற்றும் விரும்பிய துறையை தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அவர்கள் விரும்பிய துறையை படிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும் பொதுத்தேர்வு மார்ச் மாதம் இரண்டாம் வாரம் அல்லது மூன்றாம் வாரம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். கடந்த கல்வியாண்டில் மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. நடப்பாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல்
இந்த 2023-24 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு அவர்கள் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
EMIS தகவல்
தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகை பதிவு EMIS-ல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு எத்தனை சதவீதம் வருகை தந்திருக்கிறார்கள் என அனைத்தும் அரசுக்கு தெரிந்துவிடும். பள்ளிக்கு நீண்ட நாட்களாக வருகைதராத மாணவர்களையும் இதன் மூலம் கண்டுபிடித்துவிடாலாம். தற்போது 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்றால் அவர்களுடைய வருகைப் பதிவு கட்டாயம் அவசியம். மாணவர்களின் வருகைப் பதிவு குறைந்திருந்தால் கட்டாயம் மாணவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கேட்கப்படும்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.