Homeசினிமாநடிகர் சங்க கட்டட பணிக்கு ரூ.50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்..!

நடிகர் சங்க கட்டட பணிக்கு ரூ.50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்..!

தென்னிந்திய நடிகர் சங்கம் 1952 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறத. இந்த தென்னிந்திய சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் செயல்பட்டு வருகிறார். பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும் பொறுப்பில் இருந்து வருகின்றனர்.

அவர்களுடன் தென்னிந்திய சங்கத்தின் துணைத்தலைவர்களாக பூச்சி முருகனும், கருணாஸூம் பதவி வகித்து வருகின்றனர். தமிழ் சினிமாத்துறையில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். முக்கியமாக திரைப்படத்துறையில் நடிகர்களுக்கும் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகள், பெஃசி தொழிலாளர்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள், கருத்து வேறுபாடுகள், விநியோகஸ்தர்கள் மற்றும் நடிகர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனை போன்றவற்றை தென்னிந்திய நடிகர் சங்கம் (New Nadigar Sangam Building )தலையிட்டு பாதுகாப்பினை உறுதி செய்யும்.

இந்நிலையில் தென்னிந்திய சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அந்த சங்கத்தின் உறுப்பினரான சிவகார்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி (sivakarthikeyan donated Rs 50 Lakh from New Nadigar Sangam Building) வழங்கியுள்ளார். இதனை தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டட பணிகளை தொடர ஏதுவாக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை தலைவர் நாசர், மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கியுள்ளார் என கூறி, அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ் திரையுலகில் 50 கோடி வசூல் செய்த முதல் படம் யாருடைய படம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular