தீபாவளி பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடவுள்ள நிலையில் மக்கள் புத்தாடை, பட்டாசுகள், வாங்க கடைகளில் அலை மோதுகின்றனர். இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகுந்த கவலையளிப்பதாக இருந்தது. ஏனெனில் ஒரு நாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு அன்று இரவு கிளம்பினால் தான் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு வருகின்ற நவம்பர் 13-ஆம் தேதி Deepavali Holiday அறிவித்ததுள்ளது. வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு Deepavali பண்டிகையை கொண்டாட வரும் மக்களுக்கு இந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
தமிழக அரசு குறிப்பிட்டுள்ள செய்தியில் நவம்பர் 13-ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற நவம்பர் 18-ஆம் தேதி வேலைநாளாக அறிவித்துள்ளது.