கேரளாவில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் 29.10.2023 அன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரைமிங்கான முறையில் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தை அடுத்த களமச்சேரியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டுக் தளத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. Jehova’s witnesses எனும் கிறிஸ்த பிரிவைச் சேர்ந்த வழிபாட்டுக் கூடத்தில் குண்டுகள் வெடித்தன.
இந்த நிகழ்வு கேரள மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி என 3 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய டோமினிக் மார்ட்டின் (48) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர் YouTube-ஐ பார்த்து குண்டு தயாரித்ததாக கூறியுள்ளார். இந்த பதில் பலரிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினாலும் இது சிந்திக்க கூடிய ஒரு விசயம் தான்.
YouTube போன்ற பிரபலமான வளைத்தளங்களில் இதுபோன்ற பதிவுகள் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் போது தான் சமூக வளைத்தளங்களை கட்டுபடுத்த வேண்டியதற்கான அவசியத்தை உணர முடிகிறது.
இதுக்குறித்து புதுசேரி துணைநிலை ஆளுநர் Tamilisai Soundararajan அவர்கள் ரைமிங்காக பேசி கேள்வி எழுப்பி உள்ளார். இந்த நிகழ்வு பற்றி கூறுகையில் யூடியூப் பார்த்து சாம்பார் வைக்கலாம் குண்டு வைக்கலாமாப்பா என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர், எதிர்ப்பை தெரிவிக்க ஒரு வழிப்பாட்டு தளத்தில் குண்டு எரிந்து தான் வெளிப்படுத்த வேண்டும் என்பது இல்லை என்றும் கூறினார். தற்சமயம் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்திலும் தொடங்கியுள்ளன, எனவே கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.