தீபாவளி பண்டிகை வர இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு மக்களுக்கு ஒரு ஸ்பெஷல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கூட்டுறவுத்துறை மூலம் 60 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசானது அரசு பணியாளர்கள், பொது துறை ஊழியர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் அகவிலைபடியை உயர்த்தி வழங்கியது. அரசு ஊளியர்களுக்கு மட்டும் தீபாவளி பரிசுகளை அறிவிக்காமல் தமிழக மக்களுக்கும் Deepavali சர்ப்ரைஸ் அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு
தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான் அந்த பட்டாசை அரசு சார்பில் கூட்டுறவுத்துறை மூலம் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. அதாவது வெளியில் ஒரு பட்டாசின் விலை 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் அந்த பட்டாசு அரசு சார்பில் 300 – 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது, இதனால் மக்களுக்கு 600 ரூபாய் மிச்சமாகும்.