ரூபாய் 500 மற்றும் 1,000 செல்லாது என பிரதமர் மோடி 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அறிவித்தார். கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் மற்றும் ஊழல் பணத்தை ஒழிப்பதற்காகவும் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றுடன் Demonetization செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது.
நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக முன்னறிவிப்பு ஏதும் இன்றி நவம்பர் 8 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சி மூலம் Pana Mathipilapu அறிவிப்பை வெளியிட்டார் PM Narendra Modi.
அதன் பின்னர் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பழைய நோட்டுகளுக்கு பதிலாக 200, 500, 2,000 மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது Reserve Bank of India.
Currency Depreciation நடவடிக்கை இதுதான் முதல் முறை அல்ல. 1946 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து 10,000 மதிப்புள்ள ரூபாய் நாேட்டுகள் செல்லாது என கூறப்பட்டன. பின்பு 1954 ஆம் ஆண்டு 10,000 ரூபாய் மீண்டும் அறிமுகப்படுத்தியது RBI, 1978 ஆம் ஆண்டு மறுபடியும் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது.
2016 ஆம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 நோட்டுகளுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டும் இந்த ஆண்டு பண மதீப்பு நீக்கம் செய்தது இந்திய ரிசர்வ் வங்கி.