Homeசெய்திகள்Grand Master பட்டம் வென்ற முதல் தமிழ் பெண் வைஷாலி...

Grand Master பட்டம் வென்ற முதல் தமிழ் பெண் வைஷாலி…

வைசாலி (Vaishali) இவர் ஒரு சதுரங்க வீராங்கனை ஆவார். இவர் 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி பிறந்தார். இவர் தமிழ்நாடு சேர்ந்தவர், அதிலும் குறிப்பாக சென்னையை சேர்ந்த தமிழ்ப் பெண். வைசாலி சதுரங்க விளையாட்டில் Grand Master பட்டம் வென்ற ர.பிரக்ஞானந்தாவின் தங்கை ஆவார். இவருடைய தந்தை பெயர் ரமேஷ் பாபு ஆகும். இவரது தாயார் நாகலட்சுமி.

வைசாலி இளம் வயது முதலே சதுரங்க விளையாட்டில் ஆர்வத்துடன் இருந்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு 12- வயதிற்குட்பட்ட பெண்கள் உலக இளையோர் சதுரங்க போட்டி மற்றும் அதன் பிறகு 2015-ம் வருடம் நடைபெற்ற 14 வயதிற்குற்ப்பட்ட பெண்கள் உலக இளையோர் சதுரங்க போட்டியையும் இவர் வென்றார். இது போன்ற பல போட்டிகளை இவர் வென்றுள்ளார்.

Grand Master Vaishali

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு FIDE கிராண்ட் ஸ்விஸ் தொடரானது பிரிட்டனில் நடைபெற்றது. அதில் வைசாலி கலந்து கொண்டார். அவர் கிராண்ட் ஸ்விஸ் தொடரின் மகளிர் பிரிவில் இறுதி சுற்று வரை சென்றார். அப்போட்டியில் இவர் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை என்பவருக்கு எதிராக வைஷாலி விளையாடினார். இந்த போட்டியானது டிராவில் முடிந்தது. ஆனால் முழு தொடரின் முடிவில் அதிக புள்ளியை வைசாலி பெற்றார். அதன் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தையும் வைஷாலி வென்றார்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் CANDIDATE தொடரிலும் விளையாடும் வாய்ப்பையும் இவர் பெற்றுள்ளார். இதேபோல் ஆண்கள் பிரிவில் உலக கோப்பையில் தொடரில் வெள்ளிபதக்கம் வென்றது மூலம் இவருடைய சகோதரரான பிரக்ஞானந்தாவும் இத்தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைசாலி அவர்கள் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெறுவதற்கான மூன்று NORM-களை பெற்றிருந்தார், கிளாசிக் செஸ் போட்டி பிரிவில் 500 ELO புள்ளிகளை கடந்து தற்போது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். இதுவரை பெண்கள் பிரிவில் 41 பேர் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மூலம் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று உள்ள 3-வது வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ள முதல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வைசாலி அவர்கள் இந்த கிராண்ட் மாஸ்டர் பட்டம் தனது கனவு என்றும் இதனை வென்றது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதன் பிறகு தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த கிராண்ட மாஸ்டர் பட்டத்தை வென்றதன் மூலம் உலக சாம்பியன் பட்டத்தை நோக்கிய CANDIDATE தொடரில் பங்கேற்கவுள்ளார்.

Vaishali
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular