தமிழகத்தில் மக்களவை தேர்தல் (Makkalavai Therthal 2024) பிரசாரம் அனல் பறந்துக்கொண்டு இருக்கிறது. போட்டிப்போட்டுக்கொண்டு கட்சியினர் பிரசாரத்தில் கலந்துக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர் கட்சியில் இருக்கும் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் கலந்துக்கொண்டு (Udhayanidhi Pracharam) வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் (kanyakumari lok sabha congress Vetpalar 2024) வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து நாகர்கோயிலில் வாக்கு சேகரிப்பில் கலந்துக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய அவர் கடந்த முறை நம்மை எதிர்த்தவர்கள் ஒன்றாக நின்றனர். தற்போது அவர்கள் தனித்தனியே நிற்கிறார்கள். நீங்கள் நமது கட்சி வேட்பாளர் விஜய் வசந்தை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நாகர்கோயில் வேட்பாளரை (lok sabha election 2024 ) தோல்வியுற செய்தீர்கள். ஏமார்ந்தது நீங்கள் தான். திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு உண்மையாக உழைப்பேன் என்றார் முதல்வர் ஸ்டாலின். வாக்குகளித்தவர்கள் ஏன் நாம் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று வருந்தும்படி உழைப்பேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா தான். ஆனால் அவரையே ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, சசிகலா என்றால் யார் என்று கேட்டார் எடப்பாடி. எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி என்று கூறினார். ஒன்றிய அரசுக்கு தமிழக நலனை தாரவார்த்து கொடுத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என கூறினார்.
இவ்வாறு இவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பெண்கள் சிலர் ஏன் டாஸ்மாக் மூடவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர் நாங்கள் கடந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம் என்றார். அதற்கு பெண்கள் எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடுங்கள் என்றார். அதற்கு உதயநிதி கடந்த 2016-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்றோம். ஆனால் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்றார். அதற்கு பெண்கள் இப்போது நீங்கள் தான் ஆட்சியில் இருக்கிறீர்கள் எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடுங்கள் என்றனர். உதயநிதி நாங்கள் 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம் என்று சமாளித்துவிட்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தார்.
மேலும் படிக்க: பாதம் தாங்கிய பழனிசாமி..! பிரச்சாரத்தில் உதயநிதி பேச்சு..! |