Homeசெய்திகள்X -ன் புதிய அப்டேட்... இனி வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்…

X -ன் புதிய அப்டேட்… இனி வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்…

உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக போன் மாறியுள்ளது. இந்த போனை கொண்டு உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் புதிய புதிய தகவல்களையும் நாம் இருக்கும் இடங்களில் இருந்தே தெரிந்துகொள்கிறோம். இது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள் சமூக ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் நாம் தெரிந்து கொள்ளும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல அவற்றில் சில வதந்திகளும் இருக்கின்றன. இது போன்ற வதந்திகளை நம்பி மக்கள் இனி ஏமாற கூடாது என்பதற்காக X தளம் ஒரு புதிய அப்டேட் (New update of X) செய்துள்ளது.

X தளத்தில் தவறான தகவல்களை பரப்பும் பதிவுகளில் அதன் உண்மைத் தன்மையை அதனை பயன்படுத்தும் பயனர்களுக்கு தெரியப்படுத்த மற்றும் சரியான தகவல்களை உள்ளிட கம்யூனிட்டி நோட்ஸ் (Community Notes) என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி இந்தியாவ முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரதங்களில் ஈடுப்பட்டுள்ளன. இந்த தேர்தல் நேரத்ல் பிரச்சாரங்களுக்கு சமுக ஊடங்களும் பெரிதும் உதவுகின்றன. அனைத்து கட்சிகளும் சமூக ஊடகங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் X தளம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள Community Notes வசதியாள் தேவையற்ற வதந்திகள் பரவுகதை தவிர்க்க (X introduced Community Notes) முடியும்.

X New Update

இதுகுறித்து எக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது என்னவென்றால், தற்போது உலகெங்கும் 69 நாடுகளில் கம்யூனிட்டி நோட்ஸ் பங்களிப்பாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது இந்த வசதிக்கு இந்தியாவில் இருந்து புதிய பங்களிப்பாளர்கள் (X New Update) இணைகிறார்கள். வரும் நாட்களில் நாங்கள் மேலும் இதனை விரிவடைய செய்வோம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் X தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் (Elon Musk) கம்யூனிட்டி நோட்ஸ் வசதி இப்போது இந்தியாவில் செயல்பட தொடங்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: CSK vs SRH: இன்றைய போட்டியில் இருந்து விலகிய CSK-வின் முக்கிய வீரர்..! காரணம் என்ன?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular