ஐசிசி போட்டிகள் என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டிகள் ஆகும். இந்த போட்டிகள் வருடா வருடம் நடைபெற்று தான் வருகிறது. இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது T20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை (ICC T20 Ranking List) வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த வருடம் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சூர்யகுமார் யாதவ் வெறும் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.
மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெறும் 40 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இவருடைய இந்த சிறப்பான விளையாட்டின் மூலம் இவர் ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் மொகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
இதன் காரணமாக இவர் ஐசிசி டி20 தரவரிசையில் (ICC T20 Batsmen Ranking List) முதலிடத்தை பிடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னால் கேப்டனான விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். இவர் மொத்தம் 1,013 நாட்கள் தரவரிசையில் (Ranking list for T20 cricket batsmen) முதலிடத்தை தக்கவைத்து இருந்தார்.
இந்நிலையில் தான் தற்போது இரண்டாவது வீரராக சூர்யகுமார் யாதவ் தற்போது முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இவர் 863 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக இதுவரை 37 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் ஒரு சதம், 11 அரைசதங்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 842 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். மேலும் நியூஸிலாந்து அணியின் முக்கிய வீரரான டேவன் கான்வே 792 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: CSK vs RCB Match: முதல் போட்டி நடக்க உள்ள மைதானத்தில் பிட்ச் எப்படி இருக்கு? |