இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் டேவிட் வில்லி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவர் 2015-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் அயர்லாந்துக்கு எதிரான நடைப்பெற்ற ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினார். இதேபோல நியூசிலாந்திற்கு எதிரான நடைப்பெற்ற T20 போட்டியின் மூலம் T20 கிரிக்கெட்டில் இடம் பிடித்தார். அன்றுமுதல் 70 ODI போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி இவர் T20 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
இத்தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான Reece Topley-க்கு ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார், இந்நிலையில் அவருக்குப் பதிலாக டேவிட் வில்லி இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.
இந்த ஆண்டு உலக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் வில்லி 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஆனால் தற்போது டேவிட் வில்லி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். T20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது, இந்நிலையில் David Willey உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வுப்பெறுகதாக அறிவித்துள்ளார்.
இதனை பற்றி டேவிட் வில்லி தனது Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த நாள் வருவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை. சிறு வயது முதலே இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. எனவே, கவனமாக சிந்தித்து, பரிசீலித்து, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது என்பதை மிகவும் வருத்தத்துடன் உணர்கிறேன் என்றும், நான் மிகுந்த பெருமையுடன் இங்கிலாந்து அணிக்கான ஜெர்சியை அணிந்திருக்கிறேன். உலகின் சிறந்த வீரர்கள் சிலருடன் ஒரு நம்பமுடியாத வெள்ளை பந்து அணியில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம். நான் வழியில் சிறந்த நினைவுகள் மற்றும் நண்பர்களை உருவாக்கி, சில கடினமான காலங்களில் இருந்திருக்கிறேன்.
எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், அம்மா, அப்பா ஆகியோரின் தியாகம் மற்றும் ஆதரவு இல்லாமல் நான் என் கனவுகளைப் பின்தொடர்ந்திருக்க முடியாது என வில்லி குறிப்பிட்டுள்ளார்.