Homeசெய்திகள்பூமியை விட 3.7 மடங்கு அதிகம் தண்ணீர் உள்ள இளம் நட்சத்திரம் கண்டுபிடிப்பு..!

பூமியை விட 3.7 மடங்கு அதிகம் தண்ணீர் உள்ள இளம் நட்சத்திரம் கண்டுபிடிப்பு..!

இறைவனின் படைப்புகள் அனைத்தும் மனிதர்களை வியப்பில் தான் ஆழ்த்தி வருகிறது. இதனை சிலர் அறிவியலின் படைப்பு என்றும் கூறுவார்கள். நாம் வாழும் பூமி கூட ஒரு அதிசயம் தான். இவை எல்லாம் எப்படி உருவானது. பூமியில் மனிதர்கள் எவ்வாறு உருவாகினோம் என்ற கேள்விகளுக்கு எல்லாம் யாரிடமும் பதில் இல்லை. இது போல இன்னும் பல விசயங்கள் புரியாத புதிராகதான் உள்ளது.

இப்போது உள்ள நவீன உலகத்தில் பல புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் இவை போன்ற கேள்விகளுக்கு காலத்தால் தான் பதில் சொல்ல முடியும். எனினும் பல புதிய விசயங்களை பல விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்டுபிடித்து இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதற்காக பல திட்டங்கள் மூலம் வின்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பி பல ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து தான் வருகின்றனர்.

உலக அளவில் பல நாடுகளும் பல புதிய கோள்கள் போன்ற பலவற்றை கண்டுபிடித்து தொடர்ந்து அறிமுகம் செய்து தான் வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது ஒரு புதிய இளம் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நட்சத்திரமானது பூமியிலிருந்து சுமார் 450 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி பல கிரகங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது என்று, இத்தாலியில் மிலன் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் ஸ்டெபானோ ஃபச்சினி (Astronomer Stefano Facini) தலைமையிலான ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த நட்சத்திரத்திரத்திற்கு சுமார் 1 லட்சம் ஆண்டுகள் வயது இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்த இளம் நட்சத்திரத்துக்கு ஹெச்.எல்.டவுரி (HL Dory stars) என பெயரிட்டுள்ளனர்.

அந்த நட்சத்திரத்தை சுற்றியுள்ள வட்டுகளில் பொதிந்துள்ள நீர் அளவு தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நட்சத்திரத்தில் உள்ள தண்ணீர் பூமியின் உள்ள நீரைவிடவும் 3.7 மடங்கு அதிகமாக உள்ளது.

New HL Dory stars

இந்த நட்சத்திரத்தை சுற்றி உள்ள வட்டுகளின் நீராவியும் அதனைச் சூழ்ந்துள்ள தூசுக்களின், புதிய கோள் ஒன்றின் உருவாக்கத்தை சுட்டிக்காட்டுகின்றன. இந்த நிகழ்வு இந்த பிரபஞ்சத்தில் பூமி உள்ளிட்ட அனைத்துக் கோள்களும் எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்று தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழர்..! என்ன செய்தார்?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular