இந்தியாவில் உள்ள பிரபலமான விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்று தான் ஏர் இந்தியா நிறுவனம். இந்த நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை இயக்குனரகம் நேற்று ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் (Penalty for Air India) விதித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சில விதிகள்முறைகள் விதிக்கப்படுகிறது. அவை,
- விமானக் கடமை நேர வரம்புகள் (FDTL)
- விமானிகளுக்கான சோர்வு மேலாண்மை அமைப்பு (FMS)
ஆனால் இந்த விதிகளை ஏர் இந்தியா நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவற்றை மீறி நிறுவனம் நடத்தப்படுகிறது என்று கடந்த சில காலங்களாகவே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதன் படி, விமானத்தை இயக்கும் விமானிகளுக்கான வாராந்திர ஓய்வு மற்றும் நீண்ட தூரம் செல்லும் விமானங்களுக்கு முன்னும் பின்னும் போதுமான ஓய்வு இல்லை என்பது போன்றவற்றில் குறைபாடு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக விளக்கத்தை ஏர் இந்தியா நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை இயக்குனரகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதாவது இந்த புகார்களின் (Air India Penalty Case) படி ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு போதுமான ஓய்வு நேரம் வழங்கப்படுவதில்லைத என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் குறைவான ஓய்வு நேரமும் அதிகமான பணி நேரமும் கடந்த சில காலங்களாகவே இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் பிரச்சனை ஏற்படலாம் இதனை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் பதில் அளித்த போதிலும் இந்த பதிவானது ஏர் திருப்தியாக இல்லை என்று கூறி தற்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: கவிதை எழுதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை..! கவிதை எழுதியது ஒரு குற்றமா? |