Akshaya Tritiya 2024: அட்சய திருதியை இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். தமிழ் மாதமான சித்திரை வளர்பிறையில் வரும் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். அட்சயம் (akshaya tritiya meaning in Tamil) என்றால் தேயாது, குறையாது என்று பொருள். இந்த நாளில் நாம் எது செய்தாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பலரும் தானம் வழங்கி புண்ணியங்களை சேர்ப்பார்கள். ஒரு சிலர் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள்.
முதல் யுகமாக பார்க்கப்படும் கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவிக்கப்பட்ட நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் ஜோதிட ரீதியாக இந்து மக்கள் பார்க்கிறார்கள். சொர்க்கத்தில் இருந்து புனித நதியாக கங்கை (பூமிக்கு) இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை சமண தீர்த்தகரங்கர்களுள் ஒருவராகிய ரிசபதேவர் நினைவு நாளாக பார்க்கிறார்கள்.
நாம் இந்த பதிவில் (Akshaya Tritiya in tamil) பற்றி விரிவாக காணலாம். அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.
ஜோதிடத்தில் அட்சய திருதியை ஒரு முக்கியமான நாளாகும். அதாவது மங்களகரமான நாளாக பார்க்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக முகூர்த்தம் பார்க்கப்படும் திதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றன. அவை சித்திரை மாத்தில் வளர்பிறையில் வரும் முதல் திதி முதல் தமிழ் மாதத்தின் தொடக்கம், வைகாசி வளர்பிறையில் வரும் மூன்றாம் திதி அட்சய திருதியை, ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பத்தாம் திதி விஜயதசமியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த மூன்றாம் திதியில் வரும் அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்தில் வருவதால் விஷேசமாக பார்க்கப்படுகிறது.
அட்சய திருதியை (Akshaya Tritiya story in tamil) அன்று அதிகாலை எழுந்து நீராடிவிட்டு, அன்று பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். ஒரு வாழை இலையை எடுத்து அந்த இலை முழுவதும் பச்சிரிசி நிரப்பி அதன் மேல் ஒரு செம்பு வைத்து கலசம் தயார் செய்ய வேண்டும். அந்த கலசம், அதாவது அந்த செம்பின் மீது மஞ்சள் நூல் சுற்றிலும் கட்டி, மஞ்சள் தடவிய தேங்காயை அதன் மீது வைத்து, அதனை சுற்றியும் மாவிலை வைத்துக்கொள்ள வேண்டும். அதன் அருகில் ஒரு படியில் அல்லது ஒரு சிறிய டம்பளரில் நெல் எடுத்து வைதத்துக்கொள்ள வேண்டும். பக்கத்தில் ஒரு குத்து விளக்கேற்றி அதன் மீது பூ வைத்துக்கொள்ள வேண்டும். லெட்சுமி படம், விநாயகர் படம் எழுந்தருளியது போல் இருந்தால் மிகவும் சிறப்பு. அன்றைய நாளில் என்ன வாங்கி வைத்துள்ளோமோ அதனை அருகில் வைத்து வழிபட வேண்டும். வழிபடும் போது லெட்சுமி தேவி, சிவன் பார்வதி துதி போன்றவற்றை பாடலாம் அல்லது கேட்கலாம்.
பிறகு காலையில் கோயிலுக்கு சென்று வரலாம். அட்சய திருதியை அன்று விநாயகரை வழிபடுவது மிகவும் சிறந்தது. அன்றைய தினம் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி கடாக்ஷம் பெருகும். மாலையில் சிவாலயம் சென்று வரலாம் அல்லது பெருமாள் கோயில் சென்று தரிசனம் பெற்றுவிட்டு, வீடு திரும்பியதும் பூஜை அறையில் விளக்கேற்றி கலசத்தினை வணங்க வேண்டும்.
அட்சய திருதியை அன்று மற்ற முக்கிய விரத தினங்களுக்கு விரதம் (akshaya tritiya viratham in tamil) இருப்பது போல இருக்கலாம். ஆகாரம் உண்ணாமல் திரவ ஆகாரம் எடுத்துக்கொண்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஆரோக்கியத்தில் குறைபாடு உள்ளவர்கள் இதுபோன்று விரதம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சைவ உணவை சமைத்து விரத்தை முடித்துக்கொள்ளலாம். மாலை கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு விரதத்தை முடித்துக்கொள்வது சிறப்பு.
அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்காதவர்கள் அட்சய திருதியை (akshaya tritiya significance in Tamil) அன்று தர்ப்பணம் கொடுக்கலாம். அட்சய திருதியை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்த ஒன்று. இந்நாளில் ராமேஸ்வரம், கன்னியாகுமாரி போன்ற கடல்களில் நீராடி விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
பிறகு வீட்டில் இருக்கும் பசு மாட்டிற்கு வாழையில் வாழைப்பழம் போன்றவற்றை வைத்து வழிபடுவது அதற்கு சாப்பிடக் கொடுப்பது சிறந்தது.
அட்சய திருதியை அன்று பலரும் தங்க நகைகள் தான் வாங்க வேண்டும் அல்லது வெள்ளி,போன்ற விலையுர்ந்த நகைகள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த தினத்தில் உப்பு, அரிசி, மஞ்சள், போன்றவற்றையும் வாங்கலாம். இதுபோன்ற பொருட்களை வாங்கி வழிபட்டு வந்தால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
இந்த தினத்தில் புதிய அடை, வாகனங்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம். இந்நாளில் கல்யாணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை, நிச்சயதார்த்தம், வீடு மனை போடுவது போன்ற நல்ல காரியங்களை இந்நாளில் செய்யலாம்.
மேலும் இந்த தினத்தில் நீங்கள் என்ன செய்தாலூம் அது பத்து மடங்காக பெருகும். எனவே நல்லதை செய்து அதனை 10 மடங்காக பெறுங்கள்.
அட்சய திருதியை அன்று தானம் செய்வது (what to do on akshaya tritiya in Tamil) நாம் வாங்கும் பொருட்களை வடவும் மிகவும் சிறந்த ஒன்று. அன்றைய தினம் தானம் செய்வதால் நாம் புண்ணியங்களை சேர்க்கிறோம். தங்க நகைகள் வாங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், இயலாதவர்களுக்கு தானங்களை வழங்குவது சிறந்த ஒன்று.
மேலும் படிக்க: Chitra Pournami: சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள்..! |
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக அறியப்படும் பரசுராமரின் பிறந்தநாளாக அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தின் ஆசிரியரான வியாச முனிவர், விநாயகப் பெருமானுக்கு இதிகாசக் கதையைச் சொல்லத் தொடங்கிய என்பது ஐதீகம்.
இந்த பூமியில் உள்ள தீமைகளை அழிக்க விஷ்ணு பரசுராமராக பூமியில் மறு அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது.
வெள்ளி, 10 மே, 2024.
இந்த நாளில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான வேறுபாடு 24 முதல் 36 டிகிரி வரை இருக்கும். அங்கு சந்திரன் சூரியனுக்கு முன்னால் இருக்கும். இந்த நாளில் சூரியனும் சந்திரனும் தங்கள் கிரகங்களில் சிறப்பாகவும், உக்கிரமாகவும் இருக்கின்றன.
பெருமாள் கடவுளின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாக இந்துக்களால் அட்சய திருதியை நம்பப்படுகிறது. வைணவ ஆலயங்களில் இவர் போற்றப்படுகிறார். பரசுராமரின் நினைவாக இதை கடைப்பிடிக்கிறார்கள். இந்த விழாவை பரசுராம ஜெயந்தி என்று குறிப்பிடுகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…