தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தில் அனல் பறந்துக்கொண்டிருந்த தேர்தல் களம் தற்போது பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு தற்போது தான் அரசியல் கட்சி தலைவர்கள் ஓய்வெடுக்கின்றனர்.
இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் (Bjp Annamalai Visit palani temple) செய்தார். தமிழ் கடவுள் என்றழைக்கப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனி தண்டாயுதபாணி கோவியிலில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் வருகை தந்து முருகனை தரிசனம் செய்தார்.
நேற்று பழனிக்கு வந்த பாஜக கட்சி தலைவர் அண்ணாமலையை பாஜக (Bjp Annamalai Palani Kovil Tharisanam) நிர்வாகிகள் வரவேற்று ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு போகர் சித்தர் சன்னதிக்குச சென்ற அவர் சாமி கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் குடும்பிட்டுவிட்டு சிறிது நேரம் குடும்பத்துடன் அங்கு தியானம் செய்தார். பிறகு கோயில் பிரசாதங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பிறகு கீழே இறங்கி வந்த அவருடன் பொதுமக்கள் பலரும் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
மேலும் படிக்க: Lok Sabha election: அரசியலில் இருந்து விலக தயார்..! பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி..! |