தமிழகத்தில் தற்போது மக்களவை தேர்தல் ஓய்ந்த நிலையில், தற்போது தமிழகம் தேர்தல் முடிவை நோக்கி எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அனைத்துக்கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்தனர். மத்தியில் உள்ள கட்சிகளும் போட்டிப்போட்டு கொண்டு தமிழகத்திற்கு வந்து தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும் அதன் பங்கிற்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று தன் கூட்டணிக்கட்சி மற்றும் திமுக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது முதல்வர் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் (Chief Minister going to Maldives) வெளியாகியுள்ளது. அதன்படி அவர் மக்களவை தேர்தலில் ஓய்வில்லாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்ததாலும், இதன் காரணமாக அவர் ஓய்வெடுப்பதற்காக ஒரு வாரம் தன் குடும்பத்துடன் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முதல்வர் மாலத்தீவில் (CM Stalin Maldives Payanam) இருந்தவாறே அரசு பணிகளை மேற்கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி முதல்வர் ஸ்டாலின் வருகின்ற 29-ம் தேதி மாலத்தீவு பயணம் மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ரொம்ப நன்றி தம்பி..! பிரசாரத்தில் மைக்கை கையில் எடுக்கட்டுமா பாடலை ஒலிக்கவிடும் NTK..! |