தமிழகத்தை பொறுத்தவரையில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் என்பது அதிகமாக தான் உள்ளது. அதன்படி தான் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான பல ஊக்க தொகைகள் மற்றும் அவர்களுக்கான காலை உணவு, மதிய உணவு, இலவச புத்தகங்கள் ஆகியவை அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பள்ளி வேலை நாள் ஏப்ரல் 26-ம் தேதி என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இந்த 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் (All Pass for Students) வெளியாகியுள்ளது. இந்த தகவலை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் வெளியிட்டுள்ளார். அவர் இந்த அறிவிப்பை அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையான அனுப்பியுள்ளார்.
இந்த சுற்றறிக்கையில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும், மேலும் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துடன் ஒப்பிடும் போது குறையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் (Compulsory Pass for Students) என்றும் அவர் கூறியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஆசிரியர்களுக்கு வார்னிங்..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..! |