Homeசெய்திகள்ரோஹித் சர்மாவுக்கு CSK அணி மரியாதை..! 5 முறை கோப்பை வென்ற கேப்டன்..!

ரோஹித் சர்மாவுக்கு CSK அணி மரியாதை..! 5 முறை கோப்பை வென்ற கேப்டன்..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் தொடங்கிவிட்டாலே ஒரே கொண்டாட்டம் தான். அதிலும் முக்கியமாக ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தனிதனி ரசிகர்கள் இருப்பார்கள். அந்த கிரிக்கெட் வீரர் எந்த குறிப்பிட்ட அணிக்காக விளையாடுகிறாரோ அந்த அணிக்கு சப்போர்ட் செய்வார்கள்.

ஐபிஎல் மைதானத்தில் இந்த இரண்டு அணிகள் மோதிக்கொண்டால் அன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அப்படிப்பட்ட அணிகள் தான் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்.

Mumbai Indians new captain

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஹர்த்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்பி உள்ள நிலையில் கேப்படனாக இருந்த ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹார்த்திக் பாண்டியா (Mumbai Indians new captain) அறிவிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் ரோஹித் சர்மாவிற்கு (Mumbai Indians captain Rohit Sharma) நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார் ரோஹித். ஆனால் அவரை மரியாதை இல்லாமல் நடத்துவதாக மும்பை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் கோபமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அன்போலே செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக CSK ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2013-2023 ஒரு பத்தாண்டு உற்சாகமான சவால்! மிக்க மரியாதை, ரோஹித் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: CSK ரசிகர்களுக்கு தோனி சொன்ன குட் நியூஸ்
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular