2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிவரடந்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 கோப்பைகளை வென்று உள்ளன.
வரும் 2024 ஆம் ஆண்டு IPL Cricket போட்டியின் 17 வது சீசன் நடைபெற உள்ளது. இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இந்த வகையில் இந்த போட்டியிலாவது ஆர்சிபி அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்பில் RCB ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் Dhoni நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஆர்சிபி ரசிகர் ஒருவர் தோனியிடம் நான் தீவிர Royal Challengers Bangalore ரசிகர். ஐந்து கோப்பைகளை நீங்கள் CSK வென்று உள்ளீர்கள். அதேபோல் ஒரே ஒரு முறை ‘எங்க அணிக்கு வந்து கோப்பையை வென்று கொடுங்கள்’ என்று கேட்டு உள்ளார்.
ஆர்சிபி ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி பதிலாக ஆர்சிபி மிகச்சிறந்த அணி. ஒவ்வொரு அணிக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் சரியான திட்டமிடல் இல்லாததுதான். வெற்றி கோப்பையை வெல்லும் அளவிற்கு 10 அணிகயிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர்.
IPL -யில் விளையாடும் 10 அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும் கூட ஆனால் எனது அணியை விட்டு மற்றொரு அணி கோப்பையை வெல்வதற்கு நான் உதவினால், என்னுடைய ரசிகர்கள் என்ன நினைப்பார்கள். அவர்களுக்கும் வெல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா?
எல்லாவற்றையும் விட எனது அணியிலேயே இன்னும் சரிசெய்ய வேண்டிய நிறைய வேலைகள் எனக்கு இன்னும் இருக்கின்றன என தோனி ஆர்சிபி ரசிகர் கேட்ட வேள்விக்கு பதில் கூறி உள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.