Homeவிளையாட்டுஇந்தியா அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்... என்ன காரணம் தெரியுமா?

இந்தியா அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்… என்ன காரணம் தெரியுமா?

இந்த ஆண்டிற்க்கான ICC world Cup அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் தொடங்கியது. இத்தொடர் நவம்பர் மாதம் 19-ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய Allrounder அணியிலிருந்து விலகியுள்ளார்.

2023-ம் ஆண்டின் world Cup தொடரினை இந்தியா பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இது உலக கோப்பையின் 19-வது சீசன் ஆகும். இத்தொடர் இந்த வருடம் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெற இருந்தது. ஆனால் கோவிட் காரணமாக தாமதமானது.

இந்த ஆண்டிற்கான இறுதிப்போட்டி நவம்பர்-19 அன்று அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெறவுள்ளது, மற்றும் அரையிறுதிப் போட்டிகள் மும்பை வான்கடே அரங்கத்தில் ஒரு போட்டியும், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு அரங்கத்தில் மற்றொரு போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுன்டரான Hardik Pandya அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இவர் IND vs BAN போட்டியின் போது காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பிறகு நடைபெற்ற எந்த போட்டியிலும் அவர் விளையாடவில்லை. எனினும் அரையிறுதிகுள் அவர் அணிக்கு திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்து.

Hardik Pandya

ஆனால் காயம் குணமாகாத காரணத்தால் 2023-ம் ஆண்டு உலக கோப்பை தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பேரிழப்பு என்றே கூறலாம். மேலும் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் பாண்டியா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular