இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் விளையாட்டுகளில் ஒன்று தான் கிரிக்கெட். இந்த காலத்தில் பலரின் பொழுதுபோக்காக உள்ள விளையாட்டும் கிரிக்கெட் தான். இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் நடைபெற்றுகொண்டு வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி நன்றாக விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற 13-வது உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சீனியர் வீரர்கள் சிலர் வீரர்கள் ஓய்வில் உள்ளனர். உலகக் கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஓய்வில் இருந்தனர்.
சில நாட்களுக்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அத்தொடரில் 4 போட்டிகளை வென்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்நிய அணி.
இதன் பிறகு இந்திய அணியானது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதற்கு முன் நடைபெற்ற டி20 தொடரில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடினர். வரும் 17ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க உள்ளது. மேலும் அதன் பிறகு 26 ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமியும் இடம் பெற்றிருந்தார். ஆனால் தற்போது Indian cricketer Shami டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உடல் தகுதி பெறாதநிலையில் தற்போது இந்த தொடரிலிருந்து விலகியதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்திய வீரர்..! |