Homeசெய்திகள்சித்திரை திருவிழா: உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் மதுரை மாவட்ட ஆட்சியர்..!

சித்திரை திருவிழா: உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் மதுரை மாவட்ட ஆட்சியர்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை மாத திருவிழாவிற்கு முதல் நாள் கொடியேற்றம் (ஏப்ரல்12) தொடங்கியது. இதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் அன்றைய தினம் பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிலையில் கொடியேற்றம் தொடங்கி காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் நான்குமாசி வீதிகளில் வலம் வந்து ப்க்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் (Madurai Meenakshi Amman Chithirai Thiruvizha 2024) பட்டாபிஷேகம் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும். மறுநாள் 20-ம் தேதி திக்குவிஜயமும், அடுத்த நாள் 21-ம் தேதி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

மீனாட்சி திருகல்யாணத்தின் போது காலை வெள்ளி சிம்மாசனத்தில் மற்றும் மாலை தங்க அம்பாரியுடன் யானை வாகனத்திலும் அம்மன் மாட வீதிகளில் உலா வருவாள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா உலக பிரசிதி பெற்ற திருவிழாவாகும். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் எதிர்சேவை (kallalagar Thiruvila 2024) வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி இரவும், மறுநாள் ஏப்ரல் 23 தேதி அதிகாலை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறும். இந்த நிகழ்வை காண்பதற்கு வைகை ஆற்றின் கரைகளில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.

இந்த உலக பிரசிதி பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் (alagar festival 2024 dates tamil) சேவையை தரிசிக்க மதுரைக்கு லட்சக்கணக்காண பக்தர்கள் வருவார்கள். இதனால் ஆற்றில் இறங்கும் இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும், தண்ணீர் பீய்ச்சி அடிக்க சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

எனவே தோள் பையில் நிரப்பட்ட தண்ணீரை மட்டும் தான் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்றும், வைகை ஆற்றில் இறங்கும் போது மட்டும் தான் தண்ணீர் அடிக்க வேண்டும். தண்ணீர் பீய்ச்சி அடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி முன்னதாகவே பெற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டுள்ளது.

alagar festival 2024 dates tamil

இந்நிலையில் உலக பிரசிதி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சேவையை (kallalagar aatril irangum nigalvu) காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏப்ரல் 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் மதுரை மாட்ட ஆட்சியர் சங்கீதா. இந்த விடுமுறையை (kallalagar Thiruvila 2024 local holiday) ஈடுசெய்யும் விதமாக மே 11 தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் இது அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும் என குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Madurai Chithirai Thiruvizha: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றம் தொடங்கியது..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular